இன்றைய ஆட்டமும் ரத்தாகுமா.? மழை காரணமாக போட்டி தாமதம் -ஐசிசி அறிவிப்பு..!

— ICC (@ICC) June 22, 2021

மழை காரணமாக போட்டி தாமதமாகும் என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர், 2-ஆம் நாள் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, 3-ஆம் நாள் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். நியூஸிலாந்து அணியில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டை பறித்தார். அதன்பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணி 3-ஆம்நாள் ஆட்ட முடிவில் 101/2 எடுத்து இருந்தனர்.

நேற்று 4 வது நாள் ஆட்டம் மோசமான வானிலை காரணமாக முதல் அமர்வு தாமதமானது. பின்னர் முழு ஆட்டமும் நிறுத்தப்பட்டது. இன்றைய 5-வது நாள் ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறுமா..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், மழை காரணமாக போட்டி தாமதமாகும் என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இன்று உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை அதாவது இந்திய நேரப்படி 1 மணி முதல் மாலை 4 மணி வரை மழை காரணமாக 5 ஆம் நாள் போட்டி பாதிக்கப்படக்கூடும் என உள்ளூர் வானிலை மையம் தகவல் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node