#T20WorldCup2022: நமீபியாவிடம் படுதோல்வி அடைந்த இலங்கை.!

Default Image

டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. நமீபியாவில் அதிகபட்சமாக ஜான் ஃபிரைலின்க் 44 ரன்களும், ஜே.ஜே ஸ்மிட் 31 ரன்களும் குவித்தனர். இலங்கை அணியில் பிரமோத் மதுஷன் 2 விக்கெட்கள் எடுத்தார்.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நமீபியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. முடிவில் இலங்கை அணி19 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை எளிதில் வென்றது. ஜான் ஃபிரைலின்க் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்