டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு..!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல்  போட்டி நேற்று முன்தினம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கான 2-வது போட்டி இன்று  க்கெபர்ஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ்  மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி வீரர்கள்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன் ), ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:

மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரெஸா ஹென்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜெரால்ட் கோட்ஸி, லிசாட் வில்லியம்ஸ், தப்ரிஸ் ஷம்சிஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்