யார்ரா அது? ரசிகரை பார்த்து பயந்த ரோஹித் சர்மா…வைரலாகும் வீடியோ!

rohit sharma fan

ஐபிஎல் 2024 :  ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவரை பார்த்து ரோஹித் சர்மா பயந்துள்ளார்.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ரசிகர் ஒருவர் ரோஹித் சர்மாவையே பயம்காட்டிய வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸின் போது ரசிகர் ஒருவர் ரோஹித் சார்மாவை பார்க்க பாதுகாவலர்களை மீறி உள்ளே நுழைந்தார்.

உள்ளே நுழைந்த அந்த ரசிகர் வேகமாக ஓடி ரோஹித் சர்மாவை கட்டி அனைத்து அன்பை வெளிக்காட்ட முயன்றார். ஆனால், ரசிகர் ஓடி வருவதை ரோஹித் சர்மா முதலில் பார்க்கவில்லை எனவே, திடீரென பக்கத்தில் வந்த பிறகு தான் ரோஹித் சர்மா பார்த்தார். பார்த்தவுடன் பயந்து யார்ரா அது என்பது போல பின்னாடி ஓடினார்.

அதன்பிறகு தான் ரசிகர் நம்மளை பார்க்க வந்து இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு ரசிகரை கட்டியணைக்க விட்டு கையை கொடுத்தார். அந்த ரசிகரும் உற்சாகத்துடன் இஷான் கிஷனை பார்த்துவிட்டு அவரையும் கட்டியணைத்து கொண்டு உற்சாகத்துடன் மைதானத்தை விட்டு வெளியே சென்றார். இது தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்