முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி.!

Default Image

முத்தரப்பு டி-20 இன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்று வந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம், மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வந்தன. இந்த முத்தரப்பு தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தது.

இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில், கேப்டன் வில்லியம்சன் 59 ரன்கள், கிளென் பில்ப்ஸ் 29 ரன்கள், மற்றும் மார்க் சாப்மன் 25 ரன்களுடன் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹாரிஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

164 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 168 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மொஹம்மது நவாஸ் 38 ரன்கள், மொஹம்மது ரிஸ்வான் 34 ரன்கள் மற்றும் ஹைதர் அலி 31 ரன்கள் எடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வெற்றி பெற்று முத்தரப்பு தொடரையும் வென்றது.

பேட்டிங் (38ரன்கள்) மற்றும் பௌலிங்(1 விக்கெட்) என இரண்டிலும் கலக்கிய பாகிஸ்தானின் மொஹம்மது நவாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நியூசிலாந்தின் மைக்கேல் ப்ரேஸ்வெல் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்