கொஞ்சம் கூட கவலை இல்லை போல! இஷான் கிஷன் செஞ்ச காரியத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ishan kishan

ஐபிஎல் 2024 : இஷான் கிஷன் செஞ்ச காரியத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகள் விளையாடி அந்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மும்பை அணியின் பார்ம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், அடுத்த போட்டியில் வெற்றிபெற்று கம்பேக் கொடுக்கும் முனைப்போடு பயிற்சி எடுத்து வருகிறது.

கடைசியாக நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாட தயாராகி வருகிறது. இதற்கிடையில் இஷான் கிஷன் செய்த விஷயம் நெட்டிசன்கள் கலாய்க்கும் விதமாக அமைந்துள்ளது.

அது என்னவென்றால், மும்பை விமான நிலையத்தில் இஷான் கிஷன் சூப்பர் மேன் போன்ற உடை அணிந்துகொண்டு வந்தது வேடிக்கையாக இருந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் மூன்று போட்டியில் தோல்வி அடைந்தது பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை போல என கலாய்த்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்