இந்தியாவுடனான தோல்வியின் எதிரொலி.. முன்னனி வீரர் மலிங்கா ஓய்வு பெறவும் தயார் என அறிவிப்பு..

- இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
- அனைத்து போட்டியிலும் தோல்வி அடைந்ததால் முன்னனி வீரர் மலிங்கா ஓய்வு பெற தயார் என அறிவிப்பு.
பின் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா அணி இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போல் 3-வது போட்டியிலும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி பெற்றது.இதனால் விரக்தியடைந்த வேகப்பந்து வீச்சாளரும் அந்த அணியின் தலைவருமான மலிங்கா” தான் எப்போது வேண்டுமென்றாலும் ஓய்வு பெற தயார் என்று தெரிவித்துள்ளார்”. இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எந்த நேரத்திலும் நான் எனது கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’’ என்றார். இதற்கிடையே இலங்கை அணியின் முன்னாள் கேப்டன்களான திசாரா பெரேரா மற்றும் மேத்யூஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு மலிங்கா மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனாலும் இவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என விளையாட்டு வட்டாரங்கள் கருதுகின்றனர்.