தென்னாப்பிரிக்காவிற்கு பெரும் பின்னடைவு; வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே விலகல்..!

தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்தஅணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்த ஆண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நோர்கியா சிறப்பாக பந்து வீசியுள்ளார். அவர் 5 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு டெஸ்டில் ஒவ்வொரு 37-வது பந்திலும் ஒரு விக்கெட் எடுத்துள்ளார். இந்த ஆண்டில் நோர்கியா இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 6/56 என்பது இந்த ஆண்டின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
நார்ட்ஜே இல்லாததால் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு பலவீனமாக இருக்கும். அணியில் ககிசோ ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி இருந்தாலும், நோர்கியாவின் வேகம் நிச்சயமாக இந்திய பேட்ஸ்மேன்களை திரவைக்கும். நோர்கியா சமீபத்தில் ஐபிஎல் 2021இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார்.
அப்போது அவரது வேகத்தால் அனைவரையும் கவர்ந்தார். இந்த காரணத்திற்காக, ஐபிஎல் 2022 இன் மெகா ஏலத்திற்கு முன்பு டெல்லி தக்கவைத்த 4 வீரர்களில் நோர்கியா ஒருவர் ஆவார்.