கடைசி ஒரு நாள் போட்டி ! முக்கிய வீரருக்கு காயம்

Default Image
  • வருகின்ற 22 -ஆம் தேதி 3 வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெறுகிறது.
  •  தீபக் சஹருக்கு பதில் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.இதற்காக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளும் முதலில் டி-20 போட்டியில் விளையாடியது .முதல் போட்டியில் இந்திய அணியும் ,இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளது.தொடரை உறுதி செய்யும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.முதல் ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் ,இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றது.இந்நிலையில் வருகின்ற 22 -ஆம் தேதி 3 வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெறுகிறது.மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர்  விலகியுள்ளார்.  தீபக் சஹருக்கு பதில் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்