ஐபிஎல் 2025 : சவுதியில் மெகா ஏலம்? வெளியான சூப்பர் தகவல்!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தை குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

IPL Auction 2025 Update

சென்னை : இந்தியாவில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட கிரிக்கெட் தொடர் என்றால் ஐபிஎல் தொடர் தான். வருடந்தோறும் ஒரு முறை நடைபெறும் இந்த தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருவார்கள். அதன்படி, இந்த ஆண்டில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் வரை அது தொடர்ந்தது.

இதனால், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு இப்போது முதலே எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் மெகா ஏலம் தான்.ஐபிஎல் தொடரில் ஸ்வாரஸ்யமான ஒன்றாக நடைபெறும் இந்த மெகா ஏலத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு என்பது வேற லெவலில் இருக்கும் என்றே கூறலாம்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் நிறைவு பெற்றதிலிருந்து அடுத்த ஆண்டுக்கான மெகா ஏலம் எப்போது என ரசிகர்கள் பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த ஆண்டு இறுதியில் மெகா ஏலம் என்பது நடைபெறும் என தகவல் வெளியானாலும் எப்போது? எங்கே? நடைபெறும் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஆனால், தற்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நவம்பர்-16 மற்றும் 17 தேதிகளில் அல்லது டிசம்பர் 15 மற்றும் 20 தேதிகளில் சவுதியில் நடைபெற உள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வத் தகவலையும் பிசிசிஐயோ அல்லது ஐபிஎல் நிர்வாகமோ வெளியிடவில்லை.

ஆனால், இந்த தகவல் வெளியானது முதல் ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும், இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிகளை பற்றிய எந்த தகவலையும் பிசிசிஐ இது வரை வெளியிடவில்லை.

இதனால், விதிமுறைகளைப் பற்றிய அறிவிப்பு வந்த உடனே, அதனை பின் தொடர்ந்து மெகா ஏலம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என ஐபிஎல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கத்தில் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலம் நடைபெற்று என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்