ஆஸியுடன் இந்தியா தோல்வி.."இது தான் காரணம் "ஹர்மன்பிரீத் கவுர் வேதனை!

நாங்கள் ஆரம்பத்தில் நன்றாக விளையாடினோம், ஆனால் கடைசி 30-40 ரன்களை இழந்துவிட்டோம் என ஹர்மன்பிரீத் கவுர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Harmanpreet Kaur

டெல்லி :இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பதவி நீக்க கோரிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிறு (அக்டோபர் 12, 2025) விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ICC மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியில், ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி 331 ரன்கள் இலக்கைப் பாதுகாக்கத் தவறியது. இந்தத் தோல்வி, அரை இறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் இந்தியாவின் வாய்ப்புகளை சீர்குலைத்துள்ளது.

போட்டியின் முன்பு, இந்திய அணி இரண்டு போட்டிகளை வென்று, ஒன்றில் தோல்வியடைந்திருந்தது. ஆனால், இந்த முக்கியமான ஆஸ்திரேலியா மோதலில் தோல்வி ஏற்பட்டது. தொடக்கப் பேட்ஸ்மேன்கள் ஸ்மிருதி மந்தானா மற்றும் பிரதிகா ராவல் ஆரம்பத்தில் சிறப்பான சதுர ஓவருக்கு 155 ரன்கள் ஜோடி அணி சேர்த்தனர். 43-ஆவது ஓவரில் 5 விக்கெட்டுக்கு 294 ரன்கள் என்ற நிலையில் இந்தியா வசதியான நிலையில் இருந்தது. ஆனால், அதன் பிறகு கடைசி 6 விக்கெட்டுகளை 36 ரன்களுக்கு இழந்தது. இதனால், மொத்தம் 330 ரன்கள் என்ற இலக்கை வெறும் 331 ரன்களுக்கு ஆஸ்திரேலியா எளிதாக அடைந்தது.

இதனையடுத்து, கேப்டன் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹர்மான்பிரீத் கவுர், பந்துவீச்சாளர்களைப் பாதுகாத்து, பேட்டிங்கை மட்டும் கடுமையாக விமர்சித்தார். “நாங்கள் ஆரம்பத்தில் நன்றாக விளையாடினோம், ஆனால் கடைசி 30-40 ரன்களை இழந்துவிட்டோம். கடைசி 6 ஓவர்களில் நல்ல பேட்டிங் செய்யாததால் இந்தத் தோல்வி ஏற்பட்டது. இது ஒரு நல்ல பேட்டிங் விக்கெட், ஆனால் நடுப்பகுதியில் மற்றும் கடைசி ஓவர்களில் தவறுகள் செய்தோம்” என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “தொடக்கப் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதால் நாங்கள் 300 ரன்களுக்கு மேல் அடிக்கிறோம்.ஆனால், கடைசி 5 ஓவர்களில் தவறுகள் நடந்தன. கடைசி மூன்று போட்டிகளிலும் நடுப்பகுதி பேட்டிங் நன்றாக இல்லை. ஆனால், கீழ்நிலை பேட்ஸ்மேன்கள் பொறுப்பேற்றனர்” என்று விளக்கினார்.

மேலும், 2013-ஆம் ஆண்டு ODI கேப்டன்சி பொறுப்பு ஹர்மான்பிரீத் கவுருக்கு ஒப்படைக்கப்பட்டது. இது அவருக்கு முதல் 50 ஓவர்கள் உலகக் கோப்பை தலைமை. அதற்கு முன், T20 உலகக் கோப்பைகளில் (2018, 2020, 2023, 2024) அவர் நான்கு முறை இந்தியாவை வழிநடத்தினார், ஆனால் ஒரே ஒரு முறை (2020) ரன்னர்ஸ்-அப் முடிவே அடைந்தார். இந்தத் தோல்வியால், இந்தியாவின் அரை இறுதி தகுதி சிக்கலானது. ஹர்மான்பிரீத் கவுருக்கு BCCI-யால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஊடகங்களிலும், ரசிகர்களிடமும் அதிகரித்துள்ளது.