தென்ஆப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய மகளிர் அணி..!

Default Image

உலககோப்பை மகளிர் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய மகளிர் அணி 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 274 ரன்கள் குவித்தனர். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 71, மிதாலி ராஜ் 68,  ஷஃபாலி வர்மா 53, ஹர்மன்ப்ரீத் கவுர் 48 ரன்கள் குவித்தனர்.

இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய மகளிர் அணி 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் ஷப்னிம் இஸ்மாயில்,  மசாபதா கிளாஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினார். இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்