இன்று நடைபெறவுள்ளது ind vs eng 2-வது டெஸ்ட் தொடர்.. வெற்றி பாதைக்கு செல்லுமா கோலி தலைமையிலான இந்திய அணி?

Default Image

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, தற்பொழுது 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் இந்திய அணி, அடுத்த டுத்து நடைபெறும் போட்டிகளில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக முதல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் போட்டியை காண 15,000 ரசிகர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியது.

இதனால் பெரும் வரிசையில் நின்று, ரசிகர்கள் டிக்கெட்டினை வாங்கி சென்றனர். மேலும், நீண்ட நாட்களுக்கு பின் இந்தியாவில் ரசிகர்களுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த டெஸ்டிலும் தோல்வியடைந்தால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக ஐந்தாம் முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்திக்க நேரிடும்.

மேலும் இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி களமிறங்குகிறது. இதனால் இரண்டாம் டெஸ்ட் விறுவிறுப்பாக செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்