டி-20 உலகக்கோப்பையில், நடுவரின் கவனக்குறைவால் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்!  

Default Image

டி-20 உலகக்கோப்பையில் நேற்று ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டியில் நடுவரின் கவனக்குறைவால் 5 பந்துகள் மட்டுமே ஒரு ஓவரில் வீசப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகளில் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று ஆஸ்திரேலியா வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்தொண்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

ஆனால் இந்த போட்டியில் நடுவரின் கவனக்குறைவால்,ஆட்டத்தின் நான்காவது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டு ஓவர் முடிந்ததாக சொல்லப்பட்டது. நவீன் வீசிய அந்த ஒவரின் போது டேவிட் வார்னர் மற்றும் மிட்சேல் மார்ஷ் ஆடிக்கொண்டிருக்கும்போது முதல் இரண்டு பந்துகளிலும் இருவரும் 1 ரன் எடுத்தனர், மூன்றாவது பந்தில் மார்ஷ் ஒரு பௌண்டரி எடுத்தார், நான்காவது பந்தில் ஓவர்த்ரோ முறையில் 3 ரன்கள் ஓடப்பட்ட நிலையில் 5 ஆவது பந்து டாட் பால் ஆக 6 ஆவது பந்து வீசப்படாமல் ஓவர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் ரன் ரேட் முக்கிய பங்காற்றும் வகையில் ஒவ்வொரு பந்தும் ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் 20 ஓவர்களில் அந்த அணி ஒரு பந்து குறைவாகவே விளையாடியிருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பாகவே இருக்கும்.

நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி, இன்று நடைபெறும் இங்கிலாந்து-இலங்கை ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்,மேலும் இங்கிலாந்து அணி  இந்த போட்டியில் இலங்கையை வென்றால், அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்