இந்திய அணியின் ஹீரோ தினேஷ் கார்த்திக் கணிப்புப்படி நடந்த போட்டி!பாம்பின் பல்லை பிடுங்கியதன் பின்னணி …….

Default Image

கொழும்புவில் நேற்று இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நிதாஹஸ் கோப்பை டி20 தொடரின் இறுதி போட்டி,  நடைபெற்றது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து திரில்லர் வெற்றியை தேடி தந்தார் தினேஷ் கார்த்திக். தோல்வியின் விளிம்பிலிருந்து இந்தியாவை தினேஷ் கார்த்திக் காப்பார் என்று யாரும் நினைத்தார்களோ? இல்லையோ.. ஆனால் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக நினைத்தார் என்றே கூற வேண்டும்.

Image result for dinesh karthik

எப்படி என்று கேட்கிறீர்களா? போட்டிக்கு முந்தைய நாள் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதை மறைமுகமாக தெரிவித்தார். அதாவது, வங்கதேச அணி உருவானதிலிருந்து சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. தற்போது சிறந்த அணியாக திகழ்கிறது. எனினும் வங்கதேச அணிக்கு எதிராக தோற்பதை இந்திய ரசிகர்கள் விரும்புவதில்லை. வங்கதேசத்துடனான தோற்றீர்கள்? என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்றெல்லாம் கேள்விகள் எழும். எனவே வங்கதேசத்தை வெல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அவர் கூறியதற்கு ஏற்ற வகையில், களத்திலும் அவ்வாறே செயல்பட்டார். வங்கதேசத்துடன் தோற்றுவிடக்கூடாது என்ற எண்ணம் அவரது ஆழ்மனதில் பதிந்து அவரை ஆட்டிப்படைத்ததோ என நினைக்கும் அளவிற்கு அவரது இறுதிக்கட்ட ஆட்டம் இருந்தது. 2 ஓவரில் 34 ரன்கள் என்ற கடினமான சூழலிலும் டென்ஷன் ஆகாமல் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.ஆக மொத்தத்தில், வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும் என்பதை போட்டிக்கு முன்னரே தீர்மானித்துவிட்டு, அதன்படி தன்னம்பிக்கையுடன் ஆடி வெற்றி தேடி தந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்