சென்னை அணியின் கேம் சேஞ்சர் மொயீன் அலி தான் – பார்த்தீவ் பட்டேல் ஓபன் டாக்..!!

சென்னை அணியின் கேம் சேஞ்சர் மொயீன் அலி தான் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 7 போட்டிகள் விளையாடி 5 போட்டியில் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலியை பாராட்டி பேசியுள்ளார். ” நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி மிகவும் சிறப்பாக விளையாடினர். ஓப்பனிங் என்றாலும் சரி, முதல் விக்கெட் என்றாலும் சரி மிகவும் சிறப்பாக விளையாடுவார். சென்னை அணியில் பாப் டூப்ளசிஸ் மற்றும் ருத்ராஜ் இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை கொடுக்கிறார்கள் அடுத்ததாக மொயீன் அலி களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை நல்ல ரன்களுக்கு எடுத்து செல்கிறார். சென்னை அணியின் கேம் சேஜ்ஞ்சர் மொயீன் அலி தான்” என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025