#EngvsSA:இங்கிலாந்து வீரர்கள் இருவருக்கு கொரோனா, நின்றுபோன ஒருநாள் போட்டி

Default Image

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே நடைபெற இருந்த முதல்  ஒருநாள் போட்டி கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த முதல் ஒரு நாள் போட்டி மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடரின் முதல் போட்டி கடந்த 4 ஆம் தேதி நடக்க இருந்தது நிலையில் ,இருநாட்டு வீரர்களும் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது .

இதனால் போட்டியானது தள்ளிவைக்கப்பட்டு 6ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் சனிக்கிழமை இங்கிலாந்து வீரர்களுக்கு மீண்டும் கொரோனா சோதனை செய்யப்பட்டது.இந்த சோதனை முடிவுகளில் இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு கொரோனா இருக்கலாம் என்ற உறுதிப்படுத்தப்படாத முடிவு வெளிவந்துள்ளது .

இதனைத்தொடர்ந்து வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.மருத்துவ குழுக்களின் முடிவு வருவரை அந்த நபர்கள் தங்கள் அறையைவிட்டு வெளிவரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .ஏற்கனவே நடந்த 3 டி20 போட்டிகளில் அனைத்திலும்  இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்