இந்தியாவில் 12 வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் 8 அணிகள் பங்கேற்று களமிறங்கியது.இந்த அணிகள் எல்லாம் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட போதிலும் இதில் நான்கு அணிகள் மட்டுமே தகுதிப்பெற்றது.
அதில் சன்ரைஸ் ஹைதாரபாத்,டெல்லி கேப்பிட்ல்ஸ்,மும்பை இண்டியன்ஸ் , சென்னை சூப்பர் கிங்க்ஸ் அடங்கும்.
இதில் இறுதிப்போட்டி தகுதிச் சுற்றில் மும்பையுடன் -சென்னை மோதியது அதில் மும்பை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இதில் தோல்வியை தழுவிய சென்னை குவாலிபயர் -1 வெற்றி பெற்ற அணியோடு மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே குவாலிபயர் 1 ல் டெல்லி மற்றும் ஹைதராபாத் மோதியது.
இதில் டெல்லி வெற்றி பெற்று ஹைதராபாத்தை வெளியேற்றியதன் முலம் சென்னையோடு மோத ரெடியானது அதே போல இறுதிப்போட்டிக்குள் நுழையும் இரண்டாவது அணி எது ..? என்ற கேள்விக்கான பதிலாக நேற்று நடைபெற்ற போட்டியில் (டெல்லி -சென்னை ) மோதியது அதில் சென்னை வெற்றியை தட்டியது.இதன் முலம் நாளை மும்பையோடு நடைபெறும் போட்டியில் களமிறங்குகிறது.
இந்த இரண்டு அணிகளுமே கோப்பையை சுருசித்துள்ளது கவனத்தில் கொள்ள தான் வேண்டும்.நாளை ரசிகர்களின் கேள்விக்க்கான பதில் கிடைத்து விடும்.ரசிகர்களின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும் நீங்களும் கிரிக்கெட் ரசிகராக இருந்தால் (சென்னை -மும்பை ) வெல்லப் போவது யார்..?என்று உங்களின் பொன்னான கருத்தை பதிவிடுங்கள்.
ஐபிஎல் போட்டி என்றாலே அதில் சில் சுவாரஸ்சியமான நிகழ்வுகள் எல்லாம் நடைபெறும் அதில் சென்னை அணி வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாகிர் தங்களது பதிவுகளால் அதிரடி காட்டுவது வழக்கம் அதன் படி இம்முறையும் அதற்கு பஞ்சமில்லை என்றுதான் சொல்ல வேண்டும் நீங்களே பாருங்கள்
ஹர்பஜன் தனது ட்விட்டர் பதிவில்
unknown nodeமறுபக்கம் இம்ரான் தாகிர்
unknown nodeஎன்று பதிவிட்டு உள்ளார்கள் இதனை சென்னை ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகின்றது.