#BREAKING: ஐபிஎல் 2021- மீண்டும் ரசிகர்களுக்கு அனுமதி அளித்த ஐபிஎல் நிர்வாகம்!

Fans have been given permission to watch the IPL matches starting on the 19th in the United Arab Emirates.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் 19ஆம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு மீண்டும் அனுமதிக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவோ ஐபிஎல் 2021 லீக் போட்டி ஐந்து முறை சாம்பியன்கள் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ், மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸுடன் செப்டம்பர் 19 அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டி ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும். ஏனெனில், கொரோனா நிலைமை காரணமாக ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போட்டியை காண ரசிகர்கள் செப்டம்பர் 16 முதல்www.iplt20.comஎன்ற வலைத்தளத்திலும்PlatinumList.netஎன்ற வலைத்தளத்திலும் டிக்கெட்டுகளை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் கொரோனா நெறிமுறைகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விதிமுறைகளை மனதில் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளுடன் போட்டிகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

unknown node