கொரோனா அச்சுறுத்தல் … மார்ச் 31 வரை அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் தடை…

Default Image

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும்  வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை தடை விதித்தள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த ஐபிஎல்  தொடர் வருகின்ற 29-ம் தேதி தொடக்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக  ஏப்ரல் 15-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்ட்டது.அதன் பின்னர் கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுருத்தி வருகிறது.

தற்போது இந்தியாவில் பரவிய கொரோனா 85 பேரை தாக்கி உள்ளது.மேலும் 2 பேர் இறந்துள்ளனர்.மத்திய ,மாநில அரசு பொதுமக்களை பொது இடங்களில் அதிகமாக கூட வேண்டாம் என அறிவுத்தலை வழங்கி வருகிறது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்