ஆஷஸ் தொடர்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்..!

Default Image

2-வது ஆஷஸ் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இருஅணிகளும் இடையே 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் கடந்த 08-ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இன்று இரண்டாவது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்: 

டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மைக்கேல் நெசர், மிட்செல் ஸ்டார்க், ஜே ரிச்சர்ட்சன், நாதன் லியான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்: 

ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மாலன், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாட் கம்மின்ஸ் நேற்று இரவு கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தததால் பாட் கம்மின்ஸ் 7 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனால், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டனாக ஸ்மித் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்