டிராவில் முடிந்த 4-வது டெஸ்ட் போட்டி..!

Default Image

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 -வது ஆஷஸ் போட்டி டிராவில் முடிந்தது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் வென்று 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றி கோப்பையை தக்க வைத்தது.

கடந்த 5-ஆம் தேதி 4-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 294 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால்,  ஆஸ்திரேலிய அணி  2-வது இன்னிங்ஸை 122 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது.

பின்னர், 265 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக வைக்கப்பட்டது. இதைதொடந்து இறங்கிய இங்கிலாந்து அணி 102 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து  270 ரன்களை எடுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது. தற்போது 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mk stalin about CentralGovt
Rohit Sharma CT
Girl sexually harassed
Virat Kohli shubman gill
kumbh mela fire accident
Sexual Harassment - Pregnant Woman