அதிரடி காட்டிய பென் ஸ்டோக்ஸ், மாலன்.. நெதர்லாந்துக்கு 340 ரன்கள் இலக்கு ..!

ENGvNED

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இன்று 40 ஆவது லீக் போட்டியில் புனேவில் உலா மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதி வருகிறது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடங்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ,  டேவிட் மாலன் இருவரும் களமிறங்கினர். வழக்கம்போல தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சொற்ப ரன் எடுத்து வெளியேறினார்.  மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த டேவிட் மாலன் மற்றும் அடுத்து  இறங்கிய ஜோ ரூட்  இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். இருப்பினும் நிதானமாக விளையாடிய ஜோ ரூட்   28 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் பென் ஸ்டோக்ஸ் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த தொடக்க வீரர் டேவிட் மாலன் அரைசதம் பூர்த்தி செய்து 87 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஹாரி புரூக் 11, ஜோஸ் பட்லர் 5, மொயின் அலி 4 ரன் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். மத்தியில் இறங்கிய கிறிஸ் வோக்ஸ் , களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் கை கோர்த்து சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர்.

இதில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி  84 பந்தில் 6 பவுண்டரி , 6 சிக்ஸர் என மொத்தம் 108 ரன்கள் குவித்தார். மறுபக்கம் ஆடிவந்த கிறிஸ் வோக்ஸ்  தனது நிதானமான ஆட்டத்தால் அரைசதம் விளாசி அடுத்த சில நிமிடங்களில் 51 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 339 ரன்கள் குவித்தனர். நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 3 விக்கெட்டையும், லோகன் வான் பீக், ஆர்யன் தத் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar
goods trains collide in Jharkhand
TNPSC Group 1 Mains Exam
aadhav arjuna - Charles jose martin