பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா சந்திப்பு ...!

West Bengal Chief Minister Mamata Banerjee has met Prime Minister Modi in person.

பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்துள்ளார். டெல்லி சென்று பிரதமர் மோடி அவர்களை சந்தித்து திரிபுரா பிரச்சனை குறித்தும், மாநிலத்தில் உள்ள பிரச்சினை குறித்தும் நிச்சயம் பேசுவேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பிரதமர் மோடி அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் பொழுது பிஎஸ்எஃப் படையின் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என பிரதமரிடம் மம்தா வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.