பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் – பஞ்சாப் முதல்வர்!

The Punjab Chief Minister has said that he will form a government with the BJP in Punjab.

பஞ்சாபில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்கள் காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கி உள்ளார்.  இந்நிலையில் நேற்று அவர் பாஜகவை சேர்ந்த ஹரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் அவர்களை சந்தித்திருந்தார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஹரியானா முதல் மந்திரியுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். பஞ்சாபில் பாஜக மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான அகாலிதள பிரிவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் எனவும், எனது கட்சியில் பிரபலங்கள் சேருவதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.