ஒருமித்த கருத்தோடு இணைந்து பணியாற்றி வெற்றி பெற வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

We have to work together and win with consensus - Chief Minister Palanisamy's speech

மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க உறுதியேற்போம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கோயிலை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,ஒருமித்த கருத்தோடு இணைந்து பணியாற்றி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் .

ஸ்டாலின் நாடகத்திற்குமக்கள் மயங்க மாட்டார்கள்.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்.இன்று வரை அதிமுக 30 ஆண்டுகாலம் தமிழகத்தில்  ஆட்சி செய்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க உறுதியேற்போம்.தமிழ்நாடு  முழுவதும் உள்ள மாவட்டங்களில்  எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்திப் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டது என்று பேசியுள்ளார்.