“கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க கல்லூரி மற்றும் தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.எனவே இதற்காக சிகிச்சை அளிக்க பல தரப்பினரும் சொந்தமான ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க வழங்கி வருகின்றனர்.
unknown nodeஇந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் ஆண்டாள் அழகர் கல்லூரியை கொரோனாவிற்காக தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.