நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலானது கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது.அடுத்ததாக நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்புநகர்ப்புறஉள்ளாட்சிதேர்தல்தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில்,நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி,ஒவ்வொரு அலுவலருக்கும் 5 அல்லது 6 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
unknown node