நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை

Upcoming Assembly Election - Tamil Nadu Election Officer Advice

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கு தயாராகும் விதமாக அனைத்து கட்சிகளும் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டன.

இந்நிலையில் தேர்தல் ஏற்பாடுகள்  குறித்து அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை