முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அறிவுரை வழங்கி ட்வீட் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
அந்த வகையில், பெரும்பாலன இடங்களில் திமுக வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து, வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தனர். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அறிவுரை வழங்கி ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘வெற்றி பெற்ற பின்னர் நமது பொறுப்பு இன்னும் கூடுதலாகிறது! மக்கள் நம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு என்றும் உண்மையுள்ளவர்களாக நாம் பணியாற்றிட வேண்டும்! பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் சொன்ன பாடங்களை வெற்றி பெற்றவர்களுக்கு அறிவுரையாகச் சொல்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node