கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என ராகுல் ட்வீட்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், மத்திய அரசு குறித்தும், மத்திய அரசின் கொளகைகளை குறித்தும், அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருத்து பதிவிடுவதுண்டு.
அந்த வகையில் ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு கோரிக்கைகள் உள்ளன: 1. கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும். 2. கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும், நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.’ என ட்வீட் செய்துள்ளார்.
unknown node