இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள உத்தரகாண்ட் முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற உத்தரகாண்ட், உ.பி, கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.
இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார் புஷ்கர் சிங் தாமி
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில முதல்வராக பாஜக தலைவர் புஷ்கர் சிங் தாமி இன்று டேராடூனில் பதவியேற்றார். இதனால், உத்தரகாண்டின் 12- வது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார். உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார். அவர் முன்னதாக ஜூலை 2021 இல் முதல்வராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
unknown node