அதிமுக அலுவலகத்திற்கு வெளியே திடீரென போலீசார் குவிப்பு..!

Suddenly police are concentrated outside the AIADMK headquarters.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 65 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.

அதிமுக எம்எல்ஏ கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பன்னீர்செல்வத்தை நியமிக்க வேண்டுமென ஒரு தரப்பினரும், எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக நிர்வாகிகள் இடையே 4 மணி நேரம் விவாதம் நீடித்த நிலையில் முடிவும் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

முடிவு எட்டப்படாததால் இன்று காலை மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 2.30 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.