பாலியல் தொல்லை – திருச்சி பேராசிரியர் கைது!

Trichy Bishop Schiffer College Professor Paul Chandramohan arrested for sexually harassing students.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தாக திருச்சி பிஷப் ஷிபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் கைது.

மாவட்ட சமூக நல அலுவலர் புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் திருச்சி பிஷப் ஷிபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகனை கைது செய்துள்ளனர்.  தமிழ்த்துறை தலைவரான பால் சந்திரமோகன் பாலியல் தொல்லை தந்ததாக மாணவிகள் புகார் அளித்திருந்தனர். புகார் குறித்து கல்லூரி சென்று மாணவிகளிடம் சமூக நல அலுவலர் தமிமுன் நிஷா விசாரணை நடத்தியிருந்தார்.

பாலியல் தொல்லை புகாரை தொடர்ந்து தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்ட்டுள்ளதை அடுத்து, இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தொல்லை – திருச்சி பேராசிரியர் கைது!