பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,000 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர் அறிவிப்பு ..!

Rs 32,599.54 crore is allocated for school education.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், உயர் கல்விக்காக ரூ.5,369.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளில்லா விமான கழகமானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும். உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் அகில இந்திய அளவில் 27.1% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அது 51.4% ஆக உள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளிலும் Smart வகுப்பறைகள்,  25 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் Smart வகுப்பறைகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 17 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.