கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசனுடன், சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்குக்கை பதிவு செய்தார்.
இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மக்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி. ஜனநாயகக் கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன். கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும். செய்யுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node