டெல்லி:குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில்,டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேசியதாகவும்,
மேலும்,உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு,மாணவர்கள் மீட்பு பணி குறித்து பிரதமர் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கு இந்தியா நிவாரணப் பொருட்கள் அனுப்ப உள்ள நிலையில் தற்போது குடியரசுத் தலைவரை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.