இனி ஆண்டுதோறும் ஜனவரி 16 ஆம் தேதி “ஸ்டார்ட் அப் தினமாக” கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள சிறு,குறு தொழில் முனைவோரிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,காணொலி வாயிலாக இன்று காலை முதல் உரையாற்றி வருகிறார்.இந்நிலையில்,இனி ஆண்டுதோறும் ஜனவரி 16 ஆம் தேதி “ஸ்டார்ட் அப் தினமாக” கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,பிரதமர் கூறியதாவது:
“ஜனவரி 16 ஆம் தேதி ‘தேசிய தொடக்க தினமாக'(ஸ்டார்ட் அப்) கொண்டாடப்படும்.இத்னையடுர்த்து,புதிய இந்தியாவின் முதுகெலும்பாக இனி ஸ்டார்ட் அப்கள் இருக்கும்.அந்த வகையில்,இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது,ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்.நாட்டின் கண்டுபிடிப்பாளர்கள் , உலக அளவில் நாட்டைப் பெருமைப் படுத்துகிறார்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
unknown node