கங்கா திட்டத்தின் தேசிய கவுன்சிலின் முதல் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்பொழுது படிக்கட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்தார் பிரதமர் மோடி.
தேசிய கங்கை கவுன்சில் கங்கை நதியை தூய்மைபடுத்துவதற்காக அமைக்கப்பட்டது.இந்த குழு சார்பாக இன்று உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் உள்ள சந்திரசேகர் அசாத் வேளாண் பல்கலைகழகத்தில் இதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நதியை பாதுகாப்பது மற்றும் மேலாண்மை தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து, கங்கை ஆற்றை தூய்மைப் படுத்தும் பணிகளை அந்த நதியில் படகில் பயணித்தபடியே பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது திட்டத்தை பார்வையிட சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள படிக்கட்டில் நிலைதடுமாறினார்.இதன் பின்னர் அவரை பாதுகாவலர்கள் தூக்கிவிட்டனர். வீடியோ கீழே …
unknown node