பெரியார் பிறந்தநாள் – சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்ற முதல்வர் மு.க ஸ்டாலின்!

On the occasion of Periyar's birthday, the Social Justice Day Pledge was accepted for the first time on behalf of the Government of Tamil Nadu.

பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் திரு உருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளை இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் தற்போது நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதி மொழி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தலைமை செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் என உள்ளிட்டோர் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

அப்போது, சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசித்த முதலமைச்சர் முக ஸ்டாலின், பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற அன்பு நெறியை எனது வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பண்பு நெறியை எனது வாழ்வின் வழிமுறையாக கடைபிடிப்பேன். சுயமரியாதை, ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செய்லபாடுகள் அமையும் என்று கூறி இந்நாளில் உறுதி ஏற்கிறேன் என தெரிவித்தார்.

unknown node