இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை -நிர்மலா சீதாராமன்

No chance of full curfew in India again - Nirmala Sitharaman

இந்தியாவில் கொரோனாவின் 2 அலை வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு செல்ல வாய்ப்பில்லை என்றும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மால்பாஸுடனான ஒரு காணொளி சந்திப்பில் உரையாடினார்.இந்தியாவின் வளர்ச்சிக்கான நிதி கிடைப்பதை கடன் வழங்கும் இடத்தை அதிகரிக்க சர்வதேச நிதி நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளை சீதாராமன் பாராட்டினார்.

பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்க அரசாங்கத்துக்கு விருப்பமில்லை.கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் வீடுகளை தனிமைப்படுத்துதல் போன்றவைகளின் மூலம் கொரோனா பரவலின் இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதனால் கடந்த ஆண்டு விதிக்கப்பட்டது போல் முழு ஊரடங்கு இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது பற்றி இதில் விவாதிக்கப்பட்டது.