கரையை கடந்த நிவர் ! நேரில் ஆய்வு செய்கிறார் மு.க.ஸ்டாலின்

It has been reported that DMK Chief MK Stalin is personally inspecting the rain damage in Saidapet, Chennai.

மு.க.ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டையில் மழை பாதிப்புகளை  நேரில் ஆய்வு செய்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயலானது, கரையை கடந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில், பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.இதனையடுத்து, புயல் கரையை கடந்த பிறகு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாகவும், செல்போன் கோபுரங்கள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டையில் மழை பாதிப்புகளை  நேரில் ஆய்வு செய்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .