தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மிலாதுன் நபிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்து செய்தில், ‘அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நன்னாளான மீலாதுன் நபித் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!
துயர்மிகு சூழலை இளம் வயதிலேயே எதிர்கொண்டு வளர்ந்து, ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாக விளங்கினார்.
கோபம், பொறாமை, புறம் பேசுதல்” ஆகியவற்றை அறவே துறந்து, பண்புகளுடன் வாழ்வதற்கான சிந்தனைகளை மனித உயரிய சமுதாயத்துக்குச் சொன்னவர். “ஏழை எளியவர்களுக்குஉணவளியுங்கள்” என்ற மகத்தான மனிதநேயத்திற்குச் சொந்தக்காரர்.
அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவை மட்டுமின்றி அவை பொன்னேபோல் போற்றி, ஒழுகிப் பாதுகாக்கப்பட வேண்டியவை!
அண்ணல் நபிகளாரின் போதனைகளிலிருந்து வழுவாமல் இஸ்லாமியச் சமுதாய ஆழமான வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் மக்கள் பாச உணர்வுடன், அனைவருக்கும், எனது கனிந்த மீலாதுன் நபித் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
unknown node