85 லட்சம் பெரும் மிகுந்த கோபத்துடன் உள்ளனர் – கமல்ஹாசன்

Makkal Needhi Maiam cheif Kamal Haasan has demanded that 85 lakh people over the age of 60 be brought to the polls.

60 வயதை கடந்த 85 லட்சம் பேரை வாக்குச்சாவடிக்கு அழைத்துவர வேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஏற்கனவே பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன.அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்கின்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று சேலத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில்,பெண்கள் ,இளைஞர்கள்  நினைத்தால் அரசியலை மாற்றலாம்.பெண்களின் கூட்டம் அதிகம் கூடுவது மக்கள் நீதி மய்யத்திற்கு பெருமை.இவ்வளவு பெரிய எழுச்சியை ஏற்படுத்தி கொடுத்த ஊழல்வாதிகளுக்கு நன்றி  தெரிவித்து கொள்கிறேன். இளைஞர்கள் ஒட்டு அரசியலை கையில் எடுக்க வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை 85 லட்சம் பேர் 60 வயதை கடந்துள்ளனர்.அந்த 85 லட்சம் பெரும் மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.அவர்களை  வாக்குச்சாவடிக்கு அழைத்துவர வேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.