#BigBreaking::கட்சியிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் – பொதுக்குழு அறிவிப்பு!

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில்,ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில்,ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில்,அதிமுக கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படும் தீர்மானத்தை இபிஎஸ் கொண்டு வருவார் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக,மேடையில் பேசிய அவர் கூறியதாவது:”பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று ஓபிஎஸ், மனோஜ், வைத்திலிங்கம் ஆகியோரை நீக்க தீர்மானம் கொண்டு வரப்படும். குறிப்பாக,ஓபிஎஸை  கட்சியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை பொதுச்செயலாளர் இபிஎஸ் கொண்டு வருவார்”,என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,கட்சியின் அடிப்படை உறுப்பினர்,பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழு அறிவித்துள்ளது.அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ்  மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன்,ஜெசிடி பிரபாகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது,ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும்,சலசலப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.