ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும், பாஜக 28 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடந்து வருகிறது.
இதில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாஜக தனித்து போட்டியிட்டு பின் தங்கி வருகிறது. இதில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி45தொகுதிகளில் இருந்து41தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. அதே போல பாஜக25தொகுதிகளில் இருந்து27தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஜே.வி.எம் கட்சி4தொகுதிகளில் முன்னிலை வைத்து வருகிறது. மற்ற கட்சிகள்9தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன.