கந்துவட்டி, மீட்டர் வட்டி – ஒரே வாரத்தில் 124 புகார்கள் : டிஜிபி

தமிழகத்தில் ஒருவாரத்தில் 124 கந்துவட்டி, மீட்டர் வட்டி தொடர்பான புகார் மனுக்கள் பெறப்பட்டன.

தமிழகத்தில் ஒருவாரத்தில் 124 கந்துவட்டி, மீட்டர் வட்டி தொடர்பான புகார் மனுக்கள் பெறப்பட்டன.

கடந்த சில காலமாக கந்து வட்டி பிரச்சனையால் தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பலரும் அறிவுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், இதனை தடுக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் ஒருவாரத்தில் 124 கந்துவட்டி, மீட்டர் வட்டி தொடர்பான புகார் மனுக்கள் பெறப்பட்டன. மேலும், 89 புகார் மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கந்துவட்டி, மீட்டர் வட்டி – ஒரே வாரத்தில் 124 புகார்கள் : டிஜிபி