தேசிய கீதம் அவமதிப்பு : மேற்கு வங்க முதல்வர் மீது புகார்!

A BJP leader has lodged a complaint against West Bengal Chief Minister Mamata Banerjee for insulting the national anthem.

தேசிய கீதத்தை அவமதித்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் சுற்றுப்பயணமாக மும்பை சென்றுள்ளார். நேற்று மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதாகவும், ஆனால் மம்தா உட்கார்ந்து கொண்டு இருந்ததாகவும், சில வினாடிகள் கழித்துதான் எழுந்து நின்றார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், பாதி வரிகள் மட்டுமே பாடிவிட்டு அதன்பின் பாடாமல் நிறுத்தி விட்டார் எனவும், இதனால் முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய கீதத்தை அவமதித்துள்ளதுடன், மேற்கு வங்க மாநிலத்தின் கலாச்சாரம், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் இந்திய தேசத்தை அவர் அவதரித்துள்ளார் எனவும் பாஜக தலைவர் ஒருவர் மம்தா பானர்ஜி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.