வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் என சூர்யா சிவா ட்வீட்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தமிழக பாஜக OBC அணி மாநில பொது செயலாளர் திரு. சூர்யா சிவா அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், கட்சியின் பொறுப்புகளிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சூர்யா சிவா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி, இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.
அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node