எவர் ரிலீஸையும் மனதில் வைத்து இதை நான் சொல்லவில்லை -பன்னீர்செல்வத்தை சாடிய கமல்ஹாசன்

பெண்களுக்கு இரண்டரை ஆண்டுகளும் சமமாக ஆட்சி புரிய வாய்ப்பளிக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறிய நிலையில் அவரை விமர்சிக்கும் வகையில்

பெண்களுக்குஇரண்டரை ஆண்டுகளும் சமமாக ஆட்சி புரிய வாய்ப்பளிக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறிய நிலையில் அவரை விமர்சிக்கும் வகையில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்  5 ஆண்டுகால ஆட்சியில் ஆண்களுக்கு இரண்டரை ஆண்டுகளும்,பெண்களுக்குஇரண்டரை ஆண்டுகளும் சமமாக ஆட்சி புரிய வாய்ப்பளிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதனிடையே தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,இரண்டரை ஆண்டுகள் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என திடீர் பெண்ணுரிமைப் பேசுபவரின் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளர் கூட பெண் இல்லை. மக்கள் நீதி மலரும் போது குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள். எவர் ரிலீஸையும் மனதில் வைத்து இதை நான் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

unknown node